முதியவர் மயங்கி வீழ்ந்து மரணம் – யாழில் சோகம்!
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.
வீட்டுக்கு அருகில் உள்ள ஆலய மொன்றுக்குச் சென்று வழிபட்ட பின்னர் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் இயலாத நிலையில் வயல் வரம்பொன்றில் அமர்ந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோத னைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டது. இது தொடர்பில் சுன்னாகம் பொலி ஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.